International Journal of Linguistics and Computational Applications
Yazarlar: முனைவர் கி. சங்கர நாராயணன்
Konular:-
Anahtar Kelimeler:-
Özet: தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் சிறப்புகளையும் செயல்களையும் பெருமைகளையும் எடுத்துரைப்பது திருப்புகழ். இத்திருப்புகழ் கட்டமைப்பில் தொகைச் சொற்களின் பங்கு அதிகமுள்ளது. தொகைச் சொற்களை விரிப்பதால் கிடைக்கும் தொகை வகைகளின் வாயிலாக முருகக் கடவுளரின் சிறப்புகளையும் செயல்களையும் அறிய முயல்வதை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. தொகை என்பது மறைந்து வருவது. தொகா என்பது வெளிப்பட்டு வருவது. தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் எச்சவியலில் தொகைச் சொற்களின் வகைகளை விளக்குகிறார். வேற்றுமைத் தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்ற ஆறினைப் பின்வருமாறு சுட்டுகிறார்.